மேட்டுப்பாளையம் - Mettupalayam

கோவை: போதை மாத்திரை விற்பனை செய்த வாலிபர் கைது

கோவை மாநகர காவல் துறையினர் செல்வபுரம் பகுதியில் நடத்திய அதிரடி சோதனையில் போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்ட வாலிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து 720 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன. செல்வபுரம் காவல் துறையினருக்கு அப்பகுதியில் போதை மாத்திரை விற்பனை நடைபெறுவதாக நேற்று ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து, காவல் ஆய்வாளர் தலைமையிலான போலீசார் செல்வபுரம் கல்லாமேடு சுடுகாடு அருகே தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.  அப்போது, சந்தேகத்திற்கிடமான வகையில் அங்கு நின்றுகொண்டிருந்த ஒரு நபர், போலீசாரை கண்டதும் தப்பியோட முயன்றார். உடனடியாக போலீசார் அவரை விரட்டிப் பிடித்து சோதனை செய்தனர். சோதனையில், அவரிடம் போதைக்காக பயன்படுத்தப்படும் வலி நிவாரணி மாத்திரைகள் இருப்பது கண்டறியப்பட்டது. விசாரணையில், பிடிபட்ட நபர் செல்வபுரம் பகுதியைச் சேர்ந்த அப்துல் கலாம் என்பது தெரியவந்தது. மேலும், அவர் அப்பகுதியில் உள்ள இளைஞர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு போதை மாத்திரைகளை விற்பனை செய்துவந்ததும் விசாரணையில் தெரியவந்தது. கைதான அப்துல் கலாம் மீது பல்வேறு காவல் நிலையங்களில் ஏற்கனவே பத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர். இதனையடுத்து, அப்துல் கலாம் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

வீடியோஸ்


మహబూబ్‌నగర్ జిల్లా