திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி, அம்பாசமுத்திரம் தாலுகாவில் சுமார் 8 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நெல் பயிரிடப்பட்டுள்ளது. ஏக்கருக்கு 20 ஆயிரம் வரை செலவு செய்துள்ளது. நெற்பயிர்கள் அறுவடைக்கு தற்போது தயாராக உள்ள நிலையில், இடைத்தரகர்களின் ஆதிக்கத்தால் நெல் விலை வீழ்ச்சியடைந்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். ஒரு மூட்டை நெல் 1,600க்கு விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட நிலையில், தற்போது 1,400க்கு குறைந்த விலையில் கொள்முதல் செய்யப்படுகிறது.