சேலம் நகரம் - Salem City

இரு சக்கர வாகன விபத்தில் வாலிபர் பலி

இரு சக்கர வாகன விபத்தில் வாலிபர் பலி

சேலம் தாதகாப்பட்டி தாகூர் தெருவை சேர்ந்த பன்னீர்செல்வம் மகன் ஸ்ரீதர் (வயது 20). இவருடைய நண்பர் பெரியார் தெருவை சேர்ந்த சதீஷ் (21). இவர்கள் இருவரும் தாதகாப்பட்டி கேட் அம்மாள் ஏரி ரோடு பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்றனர். ஸ்ரீதர் மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்றார். அப்போது மோட்டார் சைக்கிள் திடீரென நிலை தடுமாறி அங்கிருந்த கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் படுகாயம் அடைந்த இருவரும் தூக்கி வீசப்பட்டனர். இதை பார்த்த அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு சீலநாயக்கன்பட்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் ஸ்ரீதர் பரிதாபமாக உயிரிழந்தார். சதீஷூக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

வீடியோஸ்


రంగారెడ్డి జిల్లా