பெரியார் சிலைக்கு எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை

57பார்த்தது
தந்தை பெரியாரின் 146 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு சேலம் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள பெரியாரின் திருவுருவ சிலைக்கு அதிமுக சார்பில் மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் தமிழக எதிர்க்கட்சி தலைவரும் கட்சியின் பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் வெங்கடாசலம், எம்எல்ஏ பாலசுப்ரமணியம், முன்னாள் எம்பி, எம்எல்ஏக்கள் பகுதி செயலாளர்கள் உள்பட கட்சியினர் பலரும் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :