சேலம் தனியார் சட்டக் கல்லூரி மாணவி தற்கொலை முயற்சி

71பார்த்தது
ஈரோடு மாவட்டம்
பவானியை சேர்ந்தவர் தன்யா (வயது 18) இவர் சேலம் அஸ்தம்பட்டி அருகே உள்ள கோரிமேடு பகுதியில் இருக்கும் தனியார் சட்டக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.
தனியா கல்லூரி அருகே உள்ள வாடகை வீட்டில் வசித்து வந்தார்.
இன்று காலை தன்யா இரண்டாவது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.
இதனால் படுகாயம் அடைந்த தன்யாவை பொதுமக்கள் தூக்கி வந்து சேலம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
இங்கு தன்யாவிற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்து கன்னங்குறிச்சி போலீசார் விசாரிக்கின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி