சேலத்தில்முதல்-அமைச்சர் கோப்பைக்கான பெண்கள் கபடி போட்டி

54பார்த்தது
முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டி, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய சேலம் மையம் சார்பில் கடந்த சில நாட்களாக மகாத்மா காந்தி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்று வருகிறது. பள்ளி மாணவிகளுக்கான கபடி போட்டி தொடக்க விழா நடந்தது. இதற்கு மாவட்ட விளையாட்டு அலுவலர் சிவரஞ்சன் தலைமை தாங்கினார். மாவட்ட கைப்பந்து கழக செயலாளர் சண்முகவேல் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக தி. மு. க. மாநில பொதுக்குழு உறுப்பினர் டாக்டர் மலர்விழி ராஜா கலந்து கொண்டு போட்டியை தொடங்கி வைத்தார். இதில் மாவட்டத்தில் உள்ள அரசு, தனியார் பள்ளிகளை சேர்ந்த 95 அணி வீராங்கனைகள் கலந்து கொண்டு விளையாடினர். இதில் கைப்பந்து கழக இணை செயலாளர் வடிவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி