சேலத்தில் ஆட்டோ கவிழ்ந்து டிரைவர் பலி

52பார்த்தது
சேலம் மாவட்டம் ஓமலூர் நேரு நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜா, (வயது 59) இவர் தனக்கு சொந்தமான ஆட்டோவில் தினந்தோறும்
காய்கறிகள் ஏற்றிக்கொண்டு என்ஜினீயரிங் கல்லூரி எதிரில் உள்ள ஓட்டல் மற்றும் டால்மியா போர்டு பகுதியில் ஓட்டல்களுக்கு காய்கறிகள் சப்ளை செய்து வருகிறார்.
இந்த நிலையில் இன்று அதிகாலை 4. 30 மணி அளவில் வழக்கம் போல் ஓமலூர் மார்க்கெட்டில் இருந்து காய்கறிகளை ஏற்றிக்கொண்டு கருப்பூர் ரெயில்வே மேம்பாலத்தில் வந்து கொண்டிருந்தார்.
அப்போது அவரது ஆட்டோவிற்கு பின்னால்
ஒரு தனியார் பஸ் வந்து
கொண்டிருந்தது. திடீரென அந்த தனியார் பஸ் ஆட்டோ மீது மோதியது. இதில் மேம்பாலத்தில் இருந்து 25 அடி பள்ளத்தில் ஆட்டோ தலை குப்புற கவிழ்ந்து விழுந்தது. இதில் ஆட்டோ டிரைவர் ராஜா உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார் இந்த விபத்து குறித்து தெரிய வந்ததும் கருப்பூர் இன்ஸ்பெக்டர் கவிதா மற்றும் போவீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் உயிருக்கு
ஆட்டோ டிரைவர் ராஜாவை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆட்டோ டிரைவரை பரிசோதித்த டாக்டர் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து உடலை அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனைக்கு பிரேத பரினேதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து
குறித்து கருப்பூர் போலீனர்
வழக்கு பதிவு செய்து
விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி