விநாயகர் சதுர்த்தி நிறைவையொட்டி 1, 008 லிட்டர் பாலாபிஷேகம்

51பார்த்தது
விநாயகர் சதுர்த்தி விழா நிறைவையொட்டி சேலம் ராஜகணபதி கோவிலில் சாமிக்கு 1, 008 லிட்டர் பாலாபிஷேகம் செய்யப்பட்டது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

சேலம் ராஜகணபதி கோவிலில் கடந்த 7-ந் தேதி விநாயகர் சதுர்த்தி விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது. தொடர்ந்து தினமும் காலை மற்றும் இரவில் சாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்து பூஜைகள் செய்யப்பட்டு வந்தது. மேலும், இரவில் சுவாமி புறப்பாடு நிகழ்ச்சியும் நடந்தது.
சதுர்த்தி விழா நிறைவு 12-ம் நாளான நேற்று காலை 7 மணிக்கு கணபதி ஹோமமும், அதன்பிறகு மஞ்சள் நீராட்டு, வசந்த உற்சவமும் நடந்தது. தொடர்ந்து மூலவர் மற்றும் உற்சவ மூர்த்திக்கு பால், விபூதி, சந்தனம், தயிர் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம், ஆராதனையும், அதன்பிறகு 1008 லிட்டர் பாலாபிஷேகமும் நடந்தது. மதியம் 12 மணிக்கு ராஜகணபதிக்கு 1, 500 கிலோ வண்ண வண்ண பூக்களால் புஷ்பாஞ்சலி செய்து மகா தீபாராதனை செய்யப்பட்டது. சேலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி