மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் பழனி தலைமையில் போதை பொருட்கள் தடுப்பு மற்றும் சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு தொடர்பான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் டாக்டர் தீபக் சிவாச் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் போதைப்பொருள் கட்டுப்படுத்துவது எப்படி என்று விவாதிக்கப்பட்டது.