வேலூர் நகரம் - Vellore City

நடந்து சென்ற தாய், மகனிடம் செயின் பறிப்பு!

நடந்து சென்ற தாய், மகனிடம் செயின் பறிப்பு!

பெரம்பலூர் மாவட்டம், லாடபுரத்தைச் சேர்ந்தவர் சித்ராதேவி (42). இவர் தனது மகனுடன் கடந்த 14-ந் தேதி இரவு ராணிப்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தனது உறவினரை பார்க்க சென்றார். பின்னர் சித்ராதேவி தனது மகனுடன் ஆட்டோவில் வேலூருக்கு வந்தார். வள்ளலாரில் இறங்கி உறவினர் வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக பைக்கில் பின்தொடர்ந்து வந்த அடையாளம் தெரியாத 3 நபர்கள் சித்ராதேவி மற்றும் அவரது மகன் கழுத்தில் இருந்த ரூ. ஒரு லட்சத்து 20 ஆயிரம் மதிப்புள்ள 6 பவுன் தங்க நகையை பறித்தனர். சித்ராதேவியும் அவரது மகனும் நகையை பறித்துச் சென்ற மர்மநபர்களை கூச்சலிட்டு துரத்தி பிடிக்க முயன்றனர். இருப்பினும் அவர்கள் அங்கிருந்து வேகமாக தப்பி சென்று விட்டனர். இது குறித்து சித்ராதேவி சத்துவாச்சாரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மேலும் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வீடியோஸ்