திருப்பத்துார் டவுன் - Tirupathur Town

முதியவர் அடித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் ஆயுள் தண்டனை

முதியவர் அடித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் ஆயுள் தண்டனை

ஆம்பூரில் வடமாநில முதியவர் அடித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் வாலிபருக்கு ஆயுள் தண்டனை திருப்பத்தூர் கோர்ட்டு தீர்ப்பு. திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் வடமாநில முதியவர் அடித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் வாலிபருக்கு திருப்பத்தூர் கோர்ட்டு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. *முதியவர் அடித்து கொலை* ஆம்பூர் ரெட்டித்தோப்பு பகுதியை சேர்ந்த ரபீக்அஹமதுக்கு சொந்தமான துண்டு தோல் குடோன் ஆம்பூர் உமர்ரோட்டில் உள்ளது. இந்த குடோனை வடமாநிலத்தை (உத்தரபிரதேசம்) சேர்ந்த ராம்ஜிலால் (வயது 60) மற்றும் குல்தீப் சிங் (23) ஆகிய 2 பேரும் வேலை பார்த்து வந்தனர். இவர்கள் வேலை முடிந்ததும் குடோனிலேயே தங்கிவிடுவது வழக்கம். மேலும் இந்த குடோனில் ரபீக் அஹமதுவின் உறவினர் சுஹேல் தனது மோட்டார்சைக்கிளை நிறுத்தி செல்வார். கடந்த 3. 3. 2018 அன்று சுஹேல் தனது மோட்டார்சைக்கிளை நிறுத்த வந்தபோது மதுபோதையில் இருந்த குல்தீப் சிங், சுஹேலுடன் தகராறில் ஈடுபட்டு உள்ளார். அப்போது ராம்ஜிலால் தகராறை விலக்கி விட வந்தார். இதையடுத்து குல்தீப் சிங் எனக்கு ஆதரவாக இல்லாமல் சுஹேலுக்கு எப்படி ஆதரவு தெரிவிக்கலாம் எனக்கூறி குடோனில் இருந்த குக்கர் மூடியை எடுத்து ராம்ஜிலாலை தாக்கினார். இதில் தலையில் பலத்த காயமடைந்த அவர் அங்கேயே விழுந்து கிடந்தார்.

வீடியோஸ்


నిర్మల్ జిల్లా