அரக்கோணம் அருகேவீட்டின் பூட்டை உடைத்து 20 சவரன் நகை திருட்டு

76பார்த்தது
அரக்கோணம் அடுத்த மின்னல் நரசிங்கபுரம் ஆஞ்சநேயர் கோயில் தெருவை சேர்ந்தவர் வினோத்குமார். இவர் நேற்று முன்தினம் வீட்டை பூட்டிக்கொண்டு உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு நேற்று காலை வீடு திரும்பினார். அவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் வைத்திருந்த 20 சவரன் நகை மற்றும் ரூபாய் 35 ஆயிரம் திருடுபோனது தெரிந்தது.

இதுகுறித்த புகாரின் பேரில் அரக்கோணம் தாலுகா போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி