ராணிப்பேட்டை டவுன் - Ranipet Town

பாஸ்ட்புட் கடையில் 20 கிலோ இறைச்சி பறிமுதல்!

பாஸ்ட்புட் கடையில் 20 கிலோ இறைச்சி பறிமுதல்!

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் சந்திரகலா உத்தரவின் பேரில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ராஜேஷ் மற்றும் சுதாகர் ஆகியோர் ராணிப்பேட்டை முத்துக்கடை பேருந்து நிலையத்தில் உள்ள பாஸ்ட்புட் கடைகளில் திடீர் ஆய்வு செய்தனர். அப்போது குளிர்சாதன பெட்டியில் பதப்படுத்திய நிலையில் கோழி இறைச்சி மற்றும் ரசாயனம் தடவி விற்பனைக்காக வைத்திருந்த மீன் மற்றும் கோழி இறைச்சி சுமார் 20 கிலோவை கைப்பற்றி பாதுகாப்பான முறையில் அழித்தனர். மேலும் கடையின் உரிமையாளருக்கு ஒருவாரத்திற்குள் பதிலளிக்க நோட்டீஸ் அளித்தனர். அதே நேரத்தில், பாஸ்ட் புட் கடையின் உணவு தயாரிக்கும் இடம் சுகாதாரமற்ற நிலையில் இருந்ததால் அதனை சுகாதார முறையில் பராமரிக்க வேண்டும் என்று அதிகாரிகள் அறிவுறுத்தினர்.

வீடியோஸ்


నిర్మల్ జిల్లా