

ஜோலார்பேட்டை: தடுப்பணையில் குளிக்கச்சென்ற கட்டிட மேஸ்திரி உயிரிழப்பு
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த கூத்தாண்ட குப்பம் பகுதியை சேர்ந்தவர் கட்டிட மேஸ்திரி சண்முகம் (45) இவருடைய பெரியப்பாவின் மகள் கடந்த வாரம் உடல் நலக்குறைவால் உயிரிழந்த நிலையில் காரிய சடங்குகள் முடித்துவிட்டு சண்முகம் குடும்பத்தினர் மற்றும் அவரது உறவினர்கள் 30க்கும் மேற்பட்டோர் மினிலாரி மூலம் வாணியம்பாடி அருகே தமிழக ஆந்திர எல்லை பகுதியில் உள்ள கனக நாச்சியம்மன் கோவிலில் வழிபாடு செய்து சடங்குகள் முடித்துவிட்டு அங்குள்ள தடுப்பணையில் குளிக்க சென்றுள்ளார். அவருடைய மனைவி மற்றும் பிள்ளைகள் வேண்டாம் என்று கூறியும் அங்குள்ள தடுப்பணையில் குளிக்க சென்றுள்ளார். அப்போது மனைவி மற்றும் பிள்ளைகள் கண் முன்னே தடுப்பணை நீரில் மூழ்கி சண்முகம் மாயமானார். அதிர்ச்சியடைந்த உறவினர்கள் அவரை காப்பாற்ற முயன்றுள்ளனர். ஆனால் நீண்ட நேரம் போராடியும் காப்பாற்ற முடியாததால் ஆந்திர மாநிலம் குப்பம் போலீசாருக்கும் தமிழக போலீசருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து வந்த இரு மாநில போலீசார் நீண்ட நேரம் போராடி தடுப்பணையில் மூழ்கிய சண்முகத்தின் உடலை ஆந்திர மாநில போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் சுமார் 5 மணி நேரத்துக்கு மேலாக தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.