ஜோலார்பேட்டை - Jolarpet

திருப்பத்தூர்: பங்குனி உத்திர திருவிழாவில் 508 பால்குடம் 308 மயில் காவடி

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூரில் பங்குனி உத்திர திருவிழாவில் தண்டாயுதபாணி சுவாமிக்கு 508 பால்குடங்கள் மற்றும் 308 மயில் காவடிகள் எடுத்து சாமி தரிசனம் செய்ய திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.  திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூரில் உள்ள தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் இன்று பங்குனி உத்திர திருவிழா மிக விமர்சையாக நடைபெற்றது. திருப்பத்தூர் நகர் பெரியகுளம் பகுதியிலிருந்து 500க்கும் மேற்பட்ட பெண்கள் பால்குடங்களை எடுத்தும், 300க்கும் மேற்பட்டவர்கள் மயில் காவடிகளை எடுத்து முக்கிய சாலை வழியாக மேளதாளங்களின் இன்னிசை முழங்க வீதி வழியாக சென்று ஸ்ரீ தண்டாயுதபாணி கோயிலில் வந்தடைந்து தண்டாயுதபாணி சுவாமிக்கு பால் அபிஷேகம் செய்து உற்சவர் முருகருக்கு சிறப்பு அலங்காரம் செய்து தீபாராதனை செய்தனர்.  பக்தர்கள் 'அரோகரா அரோகரா' என்று கோஷங்களை எழுப்பி சாமி தரிசனம் செய்தனர். இதில் திரளான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து சென்றனர். நூறுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். நீர் மோர் அன்னதானம் வழங்கப்பட்டது.

வீடியோஸ்


నిర్మల్ జిల్లా