பழவந்தாங்கல் ரயில் சம்பவம் - TTV கண்டனம்

53பார்த்தது
பழவந்தாங்கல் ரயில் சம்பவம் -  TTV கண்டனம்
சென்னை பழவந்தாங்கல் ரயில் நிலையத்தில் பெண் காவலரிடம் போதை ஆசாமி ஒருவர் செயினை பறிக்க முயற்சி செய்ததோடு, பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டிருப்பதாக செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கின்றன.
குற்றச் சம்பவங்களை தடுத்து மக்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டிய காவல்துறை, ஆளுங்கட்சியின் கைப்பாவையாக மாறியதன் விளைவு அத்துறையைச் சார்ந்த பெண் காவலர் ஒருவருக்கே பாதுகாப்பற்ற சூழலை உருவாக்கிஉள்ளது என அமமுக பொதுச்செயலாளர் TTV தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி