ஜோலார்பேட்டை - Jolarpet

ஜோலார்பேட்டையில் மாணவர்களுக்கு மிதிவண்டி போட்டி துவக்கம்

ஜோலார்பேட்டை பள்ளி மாணவ மாணவிகளுக்கு மாவட்ட அளவிலான நினைவு மிதிவண்டி போட்டியை கொடியசைத்து துவக்கி வைத்த எம்எல்ஏ, மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் திருப்பத்தூர் மாவட்ட தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் ஜோலார்பேட்டை சிறுவிளையாட்டு அரங்கத்தில் இருந்து 13 வயதிலிருந்து 17 வயது வரை உள்பட்ட பள்ளி மாணவ மாணவிகளுக்கு மாவட்ட அளவிலான அறிஞர் அண்ணா நினைவு மிதிவண்டி போட்டியை ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தேவராஜ் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.  இது 13 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கு 15 கிலோமீட்டர் எனவும் மாணவிகளுக்கு 10 கிலோமீட்டர் எனவும் அதேபோல 15 மற்றும் 17 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கு 20 கிலோமீட்டர் எனவும் மாணவிகளுக்கு 15 கிலோமீட்டர் எனவும் மிதிவண்டி போட்டி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு முதல் பரிசு ஐந்தாயிரம், இரண்டாம் பரிசு ரூ.3000, மூன்றாம் பரிசு ரூ.2000, என வழங்கப்பட உள்ளது. இதில் மாவட்ட விளையாட்டு அலுவலர் ஜெயக்குமாரி, திமுக ஜோலார்பேட்டை நகர செயலாளர் அன்பழகன், விளையாட்டு அரங்க பொறுப்பாளர் அன்பரசன் மற்றும் ஆசிரியர்கள் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

வீடியோஸ்


నిర్మల్ జిల్లా