
கருமாரி அம்மன் கும்பாபிஷேக விழா ஏற்பாடுகளை எம்பி ஆய்வு
கருமாரி அம்மன் கும்பாபிஷேக விழா முன் ஏற்பாடுகளை எம்பி நேரில் ஆய்வு. வேலூர் மாவட்டம் மாநகராட்சி அலுவலகம் அருகில் உள்ள ஸ்ரீதேவி கருமாரியம்மன் ஆலய கும்பாபிஷேக விழாவில் வேலூர் மாநகர செயலாளர் கார்த்திகேயன் ஏற்பாட்டில் நாளை நடைபெற உள்ள கருமாரியம்மன் ஆலய கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதில் திமுக நிர்வாகிகள் தொண்டர்கள் உள்ளிட்ட பலரும் உடன் இருந்தனர்.