ஆம்பூரில் மருத்துவர் வீட்டில் 150 சவரன் தங்க நகை பணம் கொள்ளை

59பார்த்தது
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த செங்கிலிகுப்பம்
பகுதியை சேர்ந்த திமுக பிரமுகரும் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியருமான கிருஷ்ணமூர்த்தி என்பவரின் மகன் அரசு மருத்துவர் இளம்தென்றல் இவர் மின்னூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார் இவர் சேலம் பகுதியைச் சேர்ந்த மருத்துவர் கடலரசியை கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர்கள் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருந்து வந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் 9 ஆம் தேதி கடலரிசி திடீரென அதிகமான தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். பின்னர் உயிருக்கு ஆபத்தான நிலையில் வேலூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். உயிரிழந்த மருத்துவர் கடலரசி சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி ஆம்பூர் கிராமிய காவல் நிலையத்தில் கடலரசியின் தந்தை புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் மருத்துவர் இளந்தென்றல் மீது போலிசார் வழக்கு பதிவு செய்து அவரை தலைமறைவாக இருந்த அரசு மருத்துவரை போலீசார் தேடி வந்த நிலையில் நேற்று ஜாமின் பெற்றுள்ளார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி