ஆம்பூர் - Ambur

அம்பேத்கர் நகரில் அழுகிய நிலையில் மூதாட்டி உடல் மீட்பு

அம்பேத்கர் நகரில் அழுகிய நிலையில் மூதாட்டி உடல் மீட்பு

திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் அடுத்த அம்பேத்கர் நகர் தகுதியை சேர்ந்தவர் மனோகரன் மனைவி மின்னல் (55). இவர் கணவனை பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார். இவர் வீட்டில் இருந்து ஒரு வாரமாக வெளியே வரவில்லை. மேலும் அப்பகுதியில் துர்நாற்றம் வீசியத்தால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் திருப்பத்தூர் நகர போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் அங்கு சென்று அவரது வீட்டை ஆய்வு செய்தபோது மின்னல் அழுகிய நிலையில் கிடந்தது தெரிய வந்தது. இறந்த மின்னலின் உடலை திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து அவரது உறவினர் வீரமணி கொடுத்த புகாரின் பேரில் திருப்பத்தூர் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வீடியோஸ்


నిర్మల్ జిల్లా