மடத்துக்குளம் - Madathukulam

அகஸ்தீஸ்வரர் கோவிலுக்கு வாயில் அமைக்க அடிக்கல் நாட்டல்

அகஸ்தீஸ்வரர் கோவிலுக்கு வாயில் அமைக்க அடிக்கல் நாட்டல்

திருப்பூர் மாவட்டம் , மடத்துக்குளம் வட்டம் காரத்தொழுவு கிராமத்தில் அருள்மிகு அகஸ்தீஸ்வரர் திருக்கோவில் செல்லும் வழியில் நுழைவு வாயில் அமைக்க சிறப்பு பூஜைகள் செய்து பூமி பூஜை போடப்பட்டது. நுழைவு வாயிலில் சிவ பெருமான் , பொன்னழகுநாச்சியம்மன் , விநாயகர் , முருகன் ஆகிய சிலைகளுடன் அமைக்கப்படுகிறது. இந்த பணியானது விரைவில் துவங்கப்பட்டு ஐப்பசி மாதம் நடக்கும் அருள்மிகு அகஸ்தீஸ்வரர் திருக்கோவில் கும்பாபிஷேக விழாவிற்கு தயாராகும் என தகவல் வெளியாகியுள்ளது. இன்று நடைபெற்ற நுழைவு வாயில் பூமி பூஜை நிகழ்ச்சியில் பலர் கலந்து கொண்டு பாலக்கால் போடப்பட்டு ( பூஜையில் வைக்கப்பட்ட செங்கல் ) வைத்து கட்டிட பணிகளை துவங்கி வைக்கப்பட்டது.

வீடியோஸ்


కామారెడ్డి జిల్లా