

மடத்துக்குளம்: வங்கி முன்பு கணவன் மனைவி தற்கொலை முயற்சி
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே ஜோத்தம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் தாமோதரன் (50). இவரது மனைவி லோகநாயகி (44). இருவரும் இங்குள்ள கனரா வங்கியில் வரவு செலவு செய்து வருகின்றனர். கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நண்பர் பாரதி என்பவர் 12 லட்சம் ரூபாய் கனரா வங்கியில் கடன் வாங்கியுள்ளார். தாமோதரன் உத்தரவாதம் (guarantee signature) கையெழுத்து போட்டிருந்தார். சில மாதங்களில் அவர் இறந்து விட்டதால் அவரது கடனை தாமோதரன் கட்டும்படி வங்கி அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர். ஏற்கனவே தனது கடன் மற்றும் நகைகள் அடமானத்தில் உள்ள நிலையில் நண்பரின் வங்கி கடனை கட்ட முடியாமல் தாமோதரன் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி உள்ளார். இதுகுறித்து பலமுறை வங்கியில் புகார் அளிக்கும் போதும் நடவடிக்கை எடுக்கப்படாமல், வங்கி அதிகாரிகள் அலட்சியமாகவும் அலைக்கழித்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் மனம் முடைந்த தம்பதியர்கள், கனரா வங்கி ஜோத்தம்பட்டி கிளை முன்பாக தனது தின்னரை (thinner), தங்கள் உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் இப்பகுதியில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது. மடத்துக்குளம் அருகே ஜோத்தம்பட்டி கனரா வங்கி மேலாளரால் கணவன் மனைவி தின்னரை ஊற்றி தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்த சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.