அமராவதி ஆற்றில் அதிக அளவு தண்ணீர்! பொதுமக்களுக்கு எச்சரிக்கை
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே அமராவதி ஆற்றில் இன்று ஆயிரம் கனஅடி தண்ணீர் சென்று கொண்டுள்ளது. குடிநீர் தேவையை நிவர்த்தி செய்யும் விதமாக அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் அமராவதி ஆற்றின் சராசரி அளவை விட அதிக அளவு தண்ணீர் செல்வதாலும், திடீர் மழை பெய்தால் மேலும் தண்ணீர் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக பொதுமக்களுக்கு எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது..