காங்கேயம் - Kangeyam

வெள்ளகோவிலில்  போர்வெல் ஆபரேட்டர் தூக்கு போட்டு தற்கொலை

வெள்ளகோவிலில்  போர்வெல் ஆபரேட்டர் தூக்கு போட்டு தற்கொலை

வெள்ளகோவில் அருகே மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்தவர் முத்துக்குமார் (வயது 36). மிக பிரபலமான போர்வெல் நிறுவனத்தில்  போர்வெல் ஆப்ரேட்டராகவும் மற்றும் கணக்காளராகவும் வேலை செய்து வந்தார். இவர் குடும்பத்துடன் வெள்ளகோவில் கரூர் சாலையில் உள்ள நடேசன் நகரில் குடியிருந்து வந்தார். இந்த நிலையில் முத்துக்குமாருக்கு நேற்று பிறந்த நாள் என்பதால் தான் பணிபுரியும் இடத்தில் நேற்று முன்தினமே கோயிலுக்கு செல்வதாகவும் விடுமுறை எடுத்துக் கொள்வதாகவும் கூறி விட்டு சென்ற நிலையில்,  நேற்று அதிகாலை வீட்டில் தூக்கு மாட்டி கொண்டதாக முத்துக்குமார் மனைவி மற்றும் மனைவியின் உறவினர்கள் காங்கேயம் அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர் அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் இவர் வரும் வழியிலேயே இருந்து விட்டதாக தெரிவித்தார்.   திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உடல் கூறு ஆய்வு செய்து கொள்ள பரிந்துரை செய்ததாகவும் தெரிவித்துள்ளனர். இது குறித்து வெள்ளகோவில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வீடியோஸ்


కామారెడ్డి జిల్లా