அமைச்சர் தலைமையில் திமுக நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம்
காங்கேயம் வடக்கு ஒன்றிய பரஞ்சேர்வழி ஊராட்சியில் திமுக கட்சி நிர்வாகிகள் தொகுதி மேம்பாடு குறித்த கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு. பெ. சாமிநாதன் தலைமை நடைபெற்றது. வடக்கு ஒன்றிய செயலாளர் சி. கருணை பிரகாஷ் முன்னிலை வகித்தார். தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் தமிழ்நாட்டின் முதல்வராக பொறுப்பேற்றதில் இருந்து தற்போது வரை பல நல்ல திட்டங்களை மக்களுக்கு செய்து வருகிறார். அதுமட்டுமின்றி மகளிர் இலவச பேருந்து வசதி, மகளிர் சுய உதவிக் குழுக்கள் கடன், கல்வி மற்றும் விவசாயக் கடன்கள், மருத்துவ காப்பீடு போன்ற எண்ணற்ற திட்டங்கள் அமல்படுத்தப்பட்டு சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். இந்த நிலையில் நேற்று பரஞ்சேர்வழி ஊராட்சியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்ற கலந்தாய்வு கூட்டம் நடத்தப்பட்டது. இதில் கடந்த 3 ஆண்டுகளில் தொகுதிகளில் மக்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்களின் தற்போதைய நிலையை பற்றியும், மேலும் மக்களின் தற்போதைய தேவைக்களையும் பற்றி கலந்தாய்வு கூட்டத்தில் விரிவாக பேசப்பட்டது. மேலும் வரும் ஜூன் 4ஆம் தேதியில் தேர்தல் முடிவு குறித்தும் பேசப்பட்டது. இதனை தொடர்ந்து தொகுதிகளில் மக்களின் குறைகளை நிவர்த்தி செய்ய கட்சி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அமைச்சர் கூட்டத்தில் கட்சி நிர்வாகிகளிடம் எடுத்துரைத்தார்.