மணச்சநல்லூர் - Manachanallur

கத்தியை காட்டி பணம் பறித்த வாலிபர் கைது

கத்தியை காட்டி பணம் பறித்த வாலிபர் கைது

திருச்சி திருவெறும்பூர் பகவதிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜா முகமது. இவர் திருவரம்பூரில் இருந்து கல்லணை செல்லும் சாலையில் உள்ள வெள்ளை பிள்ளையார் கோவில் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த காட்டூர் கைலாஷ் நகர் பகுதியைச் சேர்ந்த ஹரி பிரசாத் என்ற 19 வயது வாலிபர் அவரிடம் கத்தியை காட்டி மிரட்டி, அவர் சட்டை பையில் வைத்திருந்த 500 ரூபாய் பணத்தை பறித்துச் சென்றார். இதுகுறித்து ராஜா முகமது திருவரம்பூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் அவரிடம் பணப்பறிப்பில் ஈடுபட்ட ஹரிபிரசாத்தை திருவரம்பூர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

வீடியோஸ்


నల్గొండ జిల్లా