மணச்சநல்லூர் - Manachanallur

அடையாளம் தெரியாத கார் மோதி நடந்து சென்றவர் காயம்

அடையாளம் தெரியாத கார் மோதி நடந்து சென்றவர் காயம்

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி பகுதியைச் சேர்ந்தவர் பார்த்தசாரதி. சம்பவம் நடந்த நேற்று(செப்.14) மணப்பாறை அருகே உள்ள வலசுப்பட்டி பகுதியில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்பொழுது இவருக்கு பின்னால் வந்த அடையாளம் தெரியாத கார் ஒன்று இவர் மீது மோதி விபத்து ஏற்படுத்தியதில் கீழே விழுந்த பார்த்தசாரதிக்கு தலை மற்றும் மார்பு பகுதியில் காயம் ஏற்பட்டு திருச்சி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்த விபத்து சம்பவம் குறித்து காயமடைந்த பார்த்தசாரதியின் மகன் ஸ்ரீதர் அளித்த புகாரின் பேரில் வளநாடு காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வீடியோஸ்


నల్గొండ జిల్లా