மணப்பாறையில் ஆடி கடைசி வெள்ளி - பக்தர்கள் பரவசம்

52பார்த்தது
திருச்சி மாவட்டம் மணப்பாறை திருச்சி சாலையில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு ஶ்ரீவேப்பிலை மாரியம்மன் மற்றும் அருள்மிகு ஶ்ரீகாளியம்மன் கோவில்களில் இன்று ஆடி கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இந்நிலையில் காளியம்மன் கோவிலில் அம்மனின் அருட்பிரசாதமாக கூழ் வழங்கப்பட்டது. அதனை பெறுவதற்கு கூட்டம் அதிகளவில் இருந்ததால் பக்தர்கள் சிறிது நேரம் வரிசையில் காத்திருந்து அம்மனை தரிசித்து சென்றனர்.

தொடர்புடைய செய்தி