
மணப்பாறை அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி பெண் காயம்
மணப்பாறை அருகே உள்ள இனமபுதூர் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயமணி சம்பவம் நடந்த நேற்று அப்பகுதியில் சாலையில் நடந்து செல்லும்போது அவருக்குப் பின்னால் வந்த அடையாளம் தெரியாத டாட்டா ஏஸ் வாகனம் ஒன்று அவர் மீது மோதி விபத்து ஏற்பட்டது. கீழே விழுந்த ஜெயமணிக்கு வலது பக்க கழுத்து மற்றும் வலது காலில் காயம் ஏற்பட்டு மணப்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்த விபத்துச் சம்பவம் குறித்த புகாரின் பேரில் வையம்பட்டி போலீசார் விபத்தை ஏற்படுத்திய அடையாளம் தெரியாத டாட்டா ஏஸ் வாகன ஓட்டுநர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.