மணச்சநல்லூர் - Manachanallur

துப்பாக்கி தொழிற்சாலை ஊழியர் மயங்கி விழுந்து உயிரிழப்பு

துப்பாக்கி தொழிற்சாலை ஊழியர் மயங்கி விழுந்து உயிரிழப்பு

திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள துப்பாக்கி தொழிற்சாலை ஊழியர் பணியின் போது மயங்கி விழுந்தவர் பறிதாபமாக உயிரிழந்தார். திருவெறும்பூர் அருகே உள்ள மத்திய படைகலன் தொழிற்சாலைகளில் ஒன்றான துப்பாக்கி தொழிற்சாலை குடியிருப்பைச் சேர்ந்தவர் சிவசக்தி (47). இவர் துப்பாக்கி தொழிற்சாலையில் பிட்டராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் சிவசக்தி வழக்கம்போல் தொழிற்சாலைக்கு பணிக்கு சென்றவர் பணியின் போது மயங்கி விழுந்துள்ளார். அவரை சக ஊழியர்கள் துப்பாக்கி தொழிற்சாலை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சிவசக்தி இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். இச்சம்பவம் பற்றி நவல்பட்டு போலீசருக்கு தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிவசக்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். சிவசக்திக்கு சுமித்ரா என்ற மனைவி, கீர்த்தனா என்ற மகளும், கீர்த்திவாசன் என்ற மகனும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வீடியோஸ்


నల్గొండ జిల్లా