துறையூர் புறவழிச் சாலை ஓரமாக உள்ள குப்பைகளை அகற்ற கோரிக்கை

77பார்த்தது
துறையூர் புறவழிச் சாலையில் சாலையோரமாக கொட்டப்பட்டுள்ள குப்பைகளை அகற்ற அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நாமக்கல் முசிறி ஆகிய பகுதிகளில் இருந்து சென்னை செல்லும் பேருந்துகள் துறையூர் புறவழிச்சாலை வழியாக சென்று வருகின்றன. இந்நிலையில் துறையூர் புறவழிச் சாலையின் ஓரமாக துறையூர் பகுதியைச் சேர்ந்த ஓட்டல் மற்றும் இறைச்சி கடைக்காரர்கள் கழிவுகளை கொட்டுவதால் தற்போது துர்நாற்றம் வீசுவதாகவும் அப்பகுதிகளில் கழிவுகளை உண்ண நாய்கள் மற்றும் பன்றிகள் வருவதால் பொதுமக்களுக்கு இடையூறாக இருப்பதாகவும். துர்நாற்றம் வீசுவதால் தொற்று நோய் ஏற்படுவதற்கு முன்பாக குப்பைகளை அகற்றி மேற்கொண்டு குப்பைகளை கொட்டாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி