துறையூர்: அங்கன்வாடி முட்டைகளை பயன்படுத்திய ஓட்டலுக்கு சீல்

64பார்த்தது
துறையூரில் தமிழக அரசின் அங்கன்வாடி மைய முட்டைகளை பயன்படுத்திய உணவகத்திற்கு வட்டாட்சியர் தலைமையில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

திருச்சி மாவட்டம் துறையூரில் திருச்சி சாலையில் இயங்கி வரும் ரத்னா ஹோட்டல் என்ற உணவகத்தில் தமிழக அரசால் அங்கன்வாடி மையங்களுக்கு வழங்கப்படும் முட்டைகளை பயன்படுத்தி ஆம்லெட் உள்ளிட்ட பொருட்கள் விற்பனை நடைபெறுவதாக ஊடகங்களில் செய்து வெளியானது. இதைத் தொடர்ந்து துறையூர் வட்டாட்சியர் மோகன் தலைமையில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சம்பந்தப்பட்ட உணவகத்திற்கு சீல் வைத்தனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி