இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞருக்கு நேர்ந்த அவலம்
மருங்காபுரி ஒன்றியம் பெத்த கோன்பட்டியை சேர்ந்தவர் பிச்சன் மகன் கிருஷ்ணன்(35). கூலித் தொழிலாளியான இவர், தனது இருசக்கர வாகனத்தில் வியாழக்கிழமை இரவு வளநாடு- பாலகுறிச்சி சாலையில் சென்றார். அப்போது, எதிரே வந்த அடையாளம் தெரியாத இருசக்கர வாகனம் மோதியதில் கிருஷ்ணன் பலத்த காயமடைந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். இதையறிந்த வளநாடு போலீஸார் சடலத்தை மீட்டு உடற்கூறாய்விற்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.