
கோவில்பட்டி: சாலைவிதிகளை மீறிய பள்ளி வாகனம் மோதி ஆசிரியர் பலி
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி மந்திதோப்பு சாலையைச் சேர்ந்தவர் வெங்கடராமானுஜம் மகன் சீனிவாசன் (55), அரசுப் பள்ளி ஆசிரியரான இவர் இன்று காலை தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது தவறான திசையில் வந்த காமராஜ் மெட்ரிக் பள்ளியின் பேருந்து மீது மோதியதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து கிழக்கு காவல் நிலைய போலீசார் விரைந்து வந்து உடலை மீட்டு உடற்கூறாய்விற்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோவில்பட்டி மாதங்கோவில் சாலை என்பது ஒருவழிப்பாதை, இந்த பாதையில் தனியார் பள்ளி வாகனம் சாலை விதிமுறைகளை மீறி எதிர் திசையில் திடீரென வந்த காரணத்தினால் தான் விபத்து ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.