ஓட்டப்பிடாரம் - Ottapidaram

நாய் குறுக்கே வந்ததால் பைக் விபத்து: வாலிபர் பலி!

நாய் குறுக்கே வந்ததால் பைக் விபத்து: வாலிபர் பலி!

தூத்துக்குடி அருகே நாய் குறுக்கே வந்ததால் ஏற்பட்ட பைக் விபத்தில் வாலிபர் உயிரிழந்தார். மற்றொருவர் படுகாயம் அடைந்தார். தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் அருகேயுள்ள மிளகுநத்தம் நடுத் தெருவைச் சேர்ந்தவர்கள் சுந்தர்ராஜ் மகன் மகாலிங்கம் (34), ராஜகோபால் மகன் சுரேந்தர் (19). இவர்கள் இருவரும் நேற்று ஒரே பைக்கில் சிவஞானபுரத்திற்கு சென்று காெண்டிருந்தனர். பைக்கை மகாலிங்கம் ஓட்டினார். சுரேந்தர் பின்னார் அமர்ந்திருந்தார். எப்போதும்வென்றான் அருகே வந்தபோது நாய் குறுக்கே பாய்ந்ததால் பைக் நிலை தடுமாறி விபத்துக்குள்ளானது. இதில் பலத்த காயம் அடைந்த மகாலிங்கம் சம்பவ இடத்திலேயே இறந்தார். படுகாயம் அடைந்த சுரேந்தர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்து குறித்து எப்போதும்வென்றான் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

வீடியோஸ்


కరీంనగర్ జిల్లా