திருவைகுண்டம் - Srivaikuntam

தூத்துக்குடி: அகழாய்வு பணிகள் நடந்த இடத்தில் தங்க மோதிரம்

தூத்துக்குடி: அகழாய்வு பணிகள் நடந்த இடத்தில் தங்க மோதிரம்

தூத்துக்குடி மாவட்டம், ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று கடந்த 2019 ஆம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். இதையடுத்து அதற்கான பணிகளை தொடங்கி அகழாய்வு பணிகள் நடந்தது. இதற்கிடையில் கல்லூரி மாணவ மாணவிகள் சைட் மியூசியத்தை சுற்றிப்பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு ஒரு தங்க மோதிரம் ஒன்று கீழே கிடந்துள்ளது. அதை மாணவிகள் அம்பிகா மற்றும் மேகவர்ஷினி ஆகியோர் கண்டெடுத்தனர். இதையடுத்து அந்த தங்க மோதிரம் குறித்து உடன் வந்த பேராசிரியர்களிடம் அவர்கள் காட்டினர். அவர்கள் பராமரிப்பு பணியில் ஈடுபட்டிருந்த வெங்கடேஷிடம் தெரிவித்தார். அதுகுறித்து தனது உயர் அதிகாரிகளிடம் பேசிய வெங்கடேஷ் அதை பத்திரமாக வாங்கி வைத்துக் கொண்டார். ஆதிச்சநல்லூரில் ஏற்கனவே அகழாய்வு பணிகள் நடந்த போது பழமையான இரண்டு தங்கத்தால் ஆன பொருட்கள் கிடைத்துள்ளது. இந்நிலையில் தற்போது மேற்பரப்பில் கண்டெடுக்கப்பட்டுள்ள இந்த மோதிரம் தற்காலத்தில் உள்ள மோதிரமாகும். எனவே ஆதிச்சநல்லூர் அருங்காட்சியகத்தை பார்க்க வந்த நபர்கள் யாரோ தவற விட்டுச் சென்றுள்ளதாக பணியாளர்கள் தெரிவித்தனர்.

வீடியோஸ்


కరీంనగర్ జిల్లా