ஓட்டப்பிடாரம் - Ottapidaram

வீட்டின் கதவை உடைத்து பணம் கொள்ளை; போலீசார் விசாரணை

தூத்துக்குடி ஸ்பிக் நகர் அருகே சுந்தர் நகர் பகுதியில் வீட்டின் முன்பக்க கதவை உடைத்து பணம் திருட்டு. தூத்துக்குடி ஸ்பிக் நகர் சுந்தரம் நகரில் வாசிப்பவர் பிரேம்குமார் - எபனேசர் ஏஞ்சலின் தம்பதியினர், பிரேம்குமார் தனியார் காண்ட்ராக்ட் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் கணவன் மனைவி இருவரும் கடந்த 16ஆம் தேதி சுவிசேஷபுரம் ஆலயத்தில் நடைபெற்ற அசன பண்டிகை நிகழ்ச்சிக்காக சென்றுள்ளனர். அப்போது எபனேசர் ஏஞ்சலின் வீட்டில் தங்க நகைகளை எதையும் வைக்காமல் கையில் எடுத்துக்கொண்டு சென்று உள்ளார். இதைத் தொடர்ந்து நிகழ்ச்சி முடிந்து இன்று காலை 11 மணியளவில் வீட்டிற்கு அவர்கள் வந்த போது வீட்டில் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் இதுகுறித்து முத்தையாபுரம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். இதைத் தொடர்ந்து முத்தையாபுரம் காவல் நிலைய ஆய்வாளர் செந்தில் வேல்குமார் தலைமையிலான போலீசார் விரைந்து வந்து நடத்திய விசாரணையில் வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர்கள் வீட்டின் பீரோவை திறந்து அதில் தங்கநகைகளை தேடியுள்ளனர். தங்க நகைகள் எதுவும் இல்லாததை தொடர்ந்து பீரோவில் வைத்திருந்த பணம் ரூபாய் 7 ஆயிரத்தை மட்டும் எடுத்துக் கொண்டு சென்று உள்ளனர். இது குறித்து முத்தையாபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து பணத்தை திருடிய மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

வீடியோஸ்


కరీంనగర్ జిల్లా