தூத்துக்குடி: சர்வதேச நடுவர் விருது பெற்ற பெண் காவலருக்கு எஸ்பி வாழ்த்து

78பார்த்தது
தூத்துக்குடி: சர்வதேச நடுவர் விருது பெற்ற பெண் காவலருக்கு எஸ்பி வாழ்த்து
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பெண் காவலராக பணிபுரிந்து வரும் தேக்வாண்டோ விளையாட்டு வீராங்கனையான செல்வி. கிருஷ்ணவேணி என்பவர் கடந்த ஜனவரி 17 முதல் 26 வரை ஆகிய தேதிகளில் மகாராஷ்டிரா மாநிலம் புனே நகரில் நடைபெற்ற 133வது சர்வதேச தேக்வாண்டோ நடுவர் பயிற்சி முகாமில் கலந்து கொண்டு தேக்வாண்டோ விளையாட்டில் தமிழ்நாட்டின் முதல் பெண் சர்வதேச நடுவராக தேர்ச்சி பெற்று தமிழ்நாடு தேக்வாண்டோ அசோசியேசன் சார்பாக விருது பெற்றுள்ளார். 

மேலும் நேற்று (16.02.2025) தூத்துக்குடி மாவட்டம் தருவை மைதான விளையாட்டு அரங்கில் நடைபெற்ற மாவட்ட அளவிலான தேக்வாண்டோ விளையாட்டு போட்டியில் கலந்து கொண்டு சீனியர் பெண்கள் 46 முதல் 49 கிலோ எடை பிரிவில் வெற்றி பெற்று தங்கப்பதக்கம் பெற்றுள்ளார். மேற்படி தூத்துக்குடியில் நடைபெற்ற தேக்வாண்டோ விளையாட்டில் வெற்றி பெற்று தங்கப்பதக்கம் மற்றும் சர்வதேச தேக்வாண்டோ நடுவர் பயிற்சி முகாமில் கலந்து கொண்டு தமிழ்நாட்டில் முதல் பெண் சர்வதேச நடுவர் விருது பெற்ற மேற்படி பெண் காவலர் கிருஷ்ணவேணியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் இன்று மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து பாராட்டி மேலும் வெற்றி பெற வாழ்த்தினார்.

தொடர்புடைய செய்தி