தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்கத்தின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதுகுறித்த விசாரணையில், “பள்ளி, கல்லூரிகளின் பெயர்களில் சாதிப் பெயர் சேர்க்கப்படக் கூடாது” எனக் கூறிய நீதிபதி, பகுத்தறிவுவாதிகள், நாத்திகர்கள் சங்கங்களும் கூட சாதிப் பெயர்களைத் தாங்கியிருப்பதாகக் குறிப்பிட்டார். மேலும், பள்ளி, கல்லூரிகளின் பெயரில் உள்ள சாதிப் பெயர்கள் நீக்கப்படுமா? என விளக்கமளிக்க அரசுத் தரப்புக்கு நீதிபதி உத்தரவிட்டார்.