தூத்துக்குடி: அரசு ஊழியர்கள் 24 மணி நேர தர்ணா போராட்டம்..

80பார்த்தது
திமுக அரசு கடந்த சட்டமன்ற தேர்தலின் போது தாங்கள் ஆட்சிக்கு வந்தால் அரசு ஊழியர்களுக்கு பல்வேறு சலுகைகள் மற்றும் அவர்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும் என்று வாக்குறுதி அளித்திருந்தது. ஆனால் நான்கு ஆண்டுகள் ஆகியும் திமுக அரசு தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. 

இதைத்தொடர்ந்து தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் திமுக அரசு தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் 24 மணி நேர தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் முன்பு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் அனைத்து துறை ஊழியர்கள் 24 மணி நேர தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி