கோவில்பட்டி - Kovilpatti

பேருந்து நிலையத்தில் பணம் பறிப்பு: பெண் கைது!

பேருந்து நிலையத்தில் பணம் பறிப்பு: பெண் கைது!

கோவில்பட்டி அண்ணா பேருந்து நிலையத்தில் மூதாட்டியிடம் மணி பர்ஸை பறித்துச் சென்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர். விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகேயுள்ள வெங்கடாசலபுரம் கீழத்தெருவை சேர்ந்த கனகராஜ் மனைவி அழகம்மாள். இவர், தனது பேத்தி காயத்ரியுடன் தூத்துக்குடி செல்வதற்காக சாத்தூரிலிருந்து கோவில்பட்டிக்கு அண்ணா பேருந்து நிலையத்துக்கு சம்பவதினத்தன்று வந்தார். அங்கு, தூத்துக்குடி பேருந்தில் ஏறுவதற்கு இருவரும் செல்ல முயன்றபோது, அவரது மணிபர்ஸை பறித்துக்கொண்டு ஒரு பெண் தப்பியோட முயன்றார். அதில் ரூ. 6,000 இருந்ததாம். மூதாட்டி கூச்சலிடவே, சக பயணிகள் அந்தப் பெண்ணைப் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர். விசாரணையில், அவர் நாகர்கோவில் ஒழுகினசேரியைச் சேர்ந்த விக்ரம் மனைவி மீனாட்சி (39) என்பது தெரியவந்தது. இதுகுறித்து மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து அவரை கைது செய்தனர்.

வீடியோஸ்


కరీంనగర్ జిల్లా