மூளைச்சாவு ஏற்பட்ட 11 வயது சிறுவனின் உடல் உறுப்புகள் தானம்

85பார்த்தது
மூளைச்சாவு ஏற்பட்ட 11 வயது சிறுவனின் உடல் உறுப்புகள் தானம்
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் காவல்நிலையத்தில் பழனிசாமி என்பவர் காவலராக பணியாற்றுகிறார். இவரது மகனான கிஷோர் (11) ஆறாம் வகுப்பு படித்து வந்தார். காய்ச்சலால் அவதிப்பட்ட கிஷோருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து சிறுவனின் உடல் உறுப்புகளை அவரின் பெற்றோர் தானமாக அளித்துள்ளனர். இதன்மூலம் கிஷோர் இறந்தும் வாழ்வார் என உறவினர்கள் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி