கோவில்பட்டி வரசக்தி விநாயகர் திருக்கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு அரிமா சங்கம் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சண்முகா நகரில் உள்ள ஸ்ரீ வரசக்தி விநாயகர் திருக்கோவில் 23ம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி திருவிழாவை முன்னிட்டு கோவில்பட்டி சென்ட்ரல் அரிமா சங்கம் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. முன்னதாக வரசக்தி விநாயகருக்கு அலங்கார அபிஷேகங்கள் உட்பட சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. பொது மக்களுக்கு இலவச வேட்டி சட்டைகளும், அன்னதானமும் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு
கோவில்பட்டி சென்ட்ரல் அரிமா சங்க தலைவர் சண்முகராஜா தலைமை வகித்து பொது மக்களுக்கு வேட்டி சேலைகளை வழங்கி அன்னதானத்தை துவக்கி வைத்தார். இதில் சென்ரல் அரிமா சங்க நிர்வாகிகள் ஜெகதீஷ், சக்திவேல், செல்வின் சுந்தர், இலுப்பையூரணி முன்னாள் பஞ்சாயத்து தலைவர் சந்தானம், உள்பட கோவில் கமிட்டி நிர்வாகிகள், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.