கோவில்பட்டி - Kovilpatti

கோவில்பட்டி: மின்சாரம் பாய்ந்து வாலிபர் பரிதாப பலி!

கோவில்பட்டி: மின்சாரம் பாய்ந்து வாலிபர் பரிதாப பலி!

கோவில்பட்டி அருகே வணிக வளாகத்தில் அலுமினியக் கதவு வேலை செய்தபோது, மின்சாரம் பாய்ந்து வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார். தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியை அடுத்த நாலாட்டின்புதூரைச் சேர்ந்த முருகன் மகன் அஜித்குமார் (26). அலுமினியக் கதவு வேலை செய்து வந்த இவர், நேற்று (அக்.,7) காலை கோவில்பட்டி சுபா நகரில் உள்ள தனியார் வணிக வளாகத்தில் அலுமினியக் கதவு பொருத்தும் பணியில் ஈடுபட்டிருந்தாராம். அப்போது, அவர் மீது மின்சாரம் பாய்ந்து அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலின்பேரில், மேற்கு காவல் நிலைய போலீசார் சென்று சடலத்தைக் கைப்பற்றி கூறாய்வுக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்

வீடியோஸ்


కరీంనగర్ జిల్లా