தூத்துக்குடியில் சுய உதவிக்குழுவினருக்கு ரூ. 70 இலட்சம் கடனுதவியை கூட்டுறவுத்துறை மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ஜெ. இராதாகிருஷ்ணன் வழங்கினார்.
தூத்துக்குடி மத்திய கூட்டுறவு வங்கி தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கூடுதல் தலைமைச்செயலாளர் கூட்டுறவுத்துறை மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை ஜெ. ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியர் க. இளம்பகவத், முன்னிலையில் நான்கு சுய உதவிக்குழுக்களை சேர்ந்த 70 மகளிர்களுக்கு ரூ. 70 இலட்சம் குழு கடனாகவும், கலைஞரின் கனவு இல்லத்திட்ட கடன் மூலம் ஒரு பயனாளிகளுக்கு ரூ. 1 இலட்சத்திற்கான காசோலையினை வழங்கினார்.