இட்லி சாப்பிட்ட சிறுவன் பரிதாப பலி

63பார்த்தது
இட்லி சாப்பிட்ட சிறுவன் பரிதாப பலி
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள மங்களபுரம் பகுதியைச் சேர்ந்தவர் தேவி. இவரது மகன் வெங்கடேஷ் (வயது 15). மனநலம் பாதிக்கப்பட்ட இவரை கோரிமேடு பகுதியில் உள்ள காப்பகத்தில் சேர்த்து பராமரித்து வந்தனர். இதனிடையே காப்பகத்தில் இட்லி சாப்பிட்ட சிறுவனுக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சிறுவனை சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்ற நிலையில் இறந்துள்ளார். இதுகுறித்து கன்னங்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி