கோவில்பட்டி - Kovilpatti

அரிவாளை காட்டி மிரட்டி வழிப்பறி: 2 வாலிபர்கள் கைது

அரிவாளை காட்டி மிரட்டி வழிப்பறி: 2 வாலிபர்கள் கைது

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி ராஜீவ் நகர் 4-வது குறுக்குத் தெருவை சேர்ந்தவர் மாடசாமி மகன் ராஜ்குமார் (50). பொறியாளர். இவர், கடந்த 20-ந் தேதி பாரதிநகர் மேட்டு தெருவில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு காரில் சென்றார். அங்கிருந்து இரவு சுமார் 8 மணியளவில் வீட்டுக்கு காரில் திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்பகுதியில் உள்ள தனியார் தீப்பட்டி கம்பெனி அருகே வரும்போது 10 பேர் கொண்ட கும்பல் திடீரென்று காரை வழிமறித்து உள்ளனர். அவரிடம் அரிவாளைக் காட்டி மிரட்டிய கும்பல், செல்போன், பவர் பேங்க் ஆகியவற்றை பறித்துள்ளனர். பின்னர் காரையும் அடித்து சேதப்படுத்திவிட்டு அந்த கும்பல் தப்பி சென்று விட்டது. இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில் மேற்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில், கோவில்பட்டி பாரதி நகர் மேட்டு தெருவை சேர்ந்த சுரேஷ்குமார் மகன் கரன் என்ற கரன்குமார் (26), பாரதி நகர், கருமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த புஷ்பராஜ் மகன் புவனேஷ் குமார் என்ற மோசஸ் (20) ஆகியோர் கூட்டாளிகளுடன் சேர்ந்து பொறியாளரிடம் வழிப்பறியில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதை தொடர்ந்து அந்த 2 வாலிபர்களையும் மேற்கு போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள மற்ற 8 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

வீடியோஸ்


కరీంనగర్ జిల్లా