பாபநாசம் - Papanasam

பாபநாசம் அருகே விவசாயி தற்கொலை

பாபநாசம் அருகே விவசாயி தற்கொலை

பாபநாசம் அருகேயுள்ள அம்மாபேட்டை காவல் சரகம், செண்பகபுரம் கிராமத்தை சோ்ந்தவா் மாரியப்பன் மகன் ரமேஷ் (55), விவசாயி. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு விபத்தில் சிக்கி கால் ஊனமான விரக்தியில் இருந்த ரமேஷ் வியாழக்கிழமை(செப்.12) இரவு மதுவில் விஷம் கலந்து குடித்து மயங்கிக் கிடந்தாராம். இதையடுத்து தஞ்சாவூா் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து ரமேஷ் மனைவி அஞ்சம்மாள் கொடுத்த புகாரின்பேரில் அம்மாபேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

வீடியோஸ்


ఆదిలాబాద్ జిల్లా