பாபநாசம் - Papanasam

அனுமதி இன்றி மாட்டு வண்டிகளில் மணல் அள்ளி வந்த 3 பேர் கைது

அனுமதி இன்றி மாட்டு வண்டிகளில் மணல் அள்ளி வந்த 3 பேர் கைது

தஞ்சாவூர் மாவட்டம், அம்மாபேட்டை காவல் நிலைய காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டினர். அப்போது உக்கடை சாலையில் வந்த 2  மாட்டு வண்டிகளை வழிமதித்து சோதனை செய்தனர். சோதனையில் ஆற்றில் இருந்து அரசு அனுமதி இன்றி மாட்டுவண்டிகளில் மணல் அள்ளி வந்தது தெரிய வந்தது. இதை தொடர்ந்து ரெண்டு மாட்டு வண்டிகளையும் பறிமுதல் செய்த போலீசார் மாட்டு வண்டிகளை ஒட்டி வந்த கொம்மஞ்சேரி காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த தேவேந்திரன் மகன் கார்த்தி வயது 27, அதே பகுதியைச் சேர்ந்தவர்களான முத்துசாமி மகன் பிரேம்குமார் 23, அய்யாறு  மகன் முத்துசாமி 67, ஆகிய மூன்று பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்

வீடியோஸ்


ఆదిలాబాద్ జిల్లా