வாய்க்காலில் புதர் மண்டி கிடப்பதால் விவசாயம் பாதிப்பு

64பார்த்தது
வாய்க்காலில் புதர் மண்டி கிடப்பதால் விவசாயம் பாதிப்பு
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் வட்டம் உமையாள்புரம் ஊராட்சிக்கு உட்பட்ட கிராமத்தில் பல்லாயிரம் ஏக்கரில் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. பெரும்பாலும் ஆற்று பாசனத்தை நம்பியே இந்த விவசாய பணிகளை விவசாயிகள் பணிகளை மேற்கொள்கின்றனர். இந்நிலையில், காவிரி ஆற்றில் இருந்து கடைமடை பகுதி அதாவது உமையாள்புரம் வடக்கு கிராமத்திற்கு செல்லும் கணபதி வாய்க்காலில் புதர் மண்டி கிடப்பதால் விவசாயம் பாதிக்கப்படும் நிலை உள்ளது. எனவே மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்குமாறு அப்பகுதி பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி