சுவாமி மலையில் பொது மருத்துவ முகாம்

52பார்த்தது
தஞ்சாவூர் மாவட்டம் சுவாமிமலையில் சனிக்கிழமை பொதுமரருத்துவ முகாம் நடைபெற்றது.

சுவாமி மலையில் உள்ள எம்எல்ஏ மழலையர் தொடக்கப்பள்ளியில் அரிமா சங்கம், மீனாட்சி மருத்துமனை சார்பில் பொது மருத்துவ சிகிச்சை முகாம் நடைபெற்றது. மருத்துவர் சஃபான் மருத்துவ முகாமை துவக்கி வைத்தார்
இந்த முகாமில் மருத்துவ குழுவினர் ரத்த அழுத்தம், சர்க்கரை, கண் காது மூக்கு தொண்டை, இதயம் உள்ளிட்ட நோய்களுக்கு இலவச பரிசோதனை மற்றும் சிகிச்சை செய்து மருந்து மாத்திரைகள் வழங்கினர்.

முன்னதாக முகாமை அரிமா சங்க தலைவர் மீரா சிவசங்கரன், செயலர் ஏஜிஎஸ் செந்தில்குமார், பொருளாளர் கே துரை பள்ளி நிர்வாகிகள் எல் முகமது. எல். மாலிக் ஆகியோர் வாழ்த்தி பேசினர். 200 க்கும் மேலான பொதுமக்கள் சிகிச்சை பெற்று சென்றனர்.

தொடர்புடைய செய்தி