வடக்குமாங்குடியில் ஹத்தம் ஹந்தூரி சந்தனக்குடம் ஊர்வலம்.

60பார்த்தது
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே வடக்கு மாங்குடியில் ஹஜ்ரத் அஷ்ஷெய்க் சைய்யது முகமது இனாயத்துல்லா அவர்களின் ஹந்தூரி உற்சவம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் அஷ்ஷெய்கு பதர் மலங்கு சாஹிபு வலியுல்லாஹ் அவர்களுக்கு சந்தனம் பூசும் நிகழ்ச்சியும், ரவ்லா ஷரீபில் சந்தனம் பூசி தப்ரூக் வழங்கும் நிகழ்வும் நடைபெற்றது. மேலும் பள்ளிவாசல் தர்காவில் இருந்து எடுத்துச் செல்லப்பட்ட கொடி, சந்தனக்குடம் முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக சென்று, ரவ்லா ஷரீபில் பாத்திஹா  ஓதி மீண்டும் பள்ளிவாசல் தர்காவை வந்தடைந்தது. நிகழ்ச்சியில் ஏராளமான  ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டு சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வடக்குமாங்குடி 
வஞ்சுவலி
ஜமாத்தார்கள்
அப்துல்நாசர், பசீர்அகமது, ராஜ்முகமது, மூத்த ஆலோசகர் 
டி. எம். ஜபருல்லா மற்றும் நிர்வாகிகள், ஜமாத்தார்கள்
செய்து இருந்தனர்.

தொடர்புடைய செய்தி